தன்னிச்சையாகப் பறக்கும் ஆளில்லா விமானத்தின் முதல் புறப்பாடு
July 12 , 2022 1507 days 733 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆனது தன்னிச்சையாகப் பறக்கும் வான்வெளித் தொழில்நுட்பக் கருவியின் முதல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இது கர்நாடகாவின் சித்ர துர்காவில் உள்ள வான்வெளியியல் சோதனைத் தளத்தில் இருந்து பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) ஆனது ஒரு சிறிய சுழல்விசை விசிறி இயந்திரத்தால் இயக்கப்படுகிறது.