TNPSC Thervupettagam

தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழ்நாடு அரசாணை

August 15 , 2026 4 days 76 0
  • நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடுவதைக் கட்டாயமாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • இந்த உத்தரவு தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களுக்குப் பொருந்தும்.
  • அலுவல் முறை நிகழ்வுகளில் தேசிய கீதத்திற்கு முன் 'வந்தே மாதரம்' இசைக்க வேண்டும் என்ற தனது ஜனவரி 28 ஆம் தேதியிட்ட வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களைக் கேட்டுக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் ஜூலை 9 அன்று எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்பட வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்மொழிந்த தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியதை அடுத்து, தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
  • தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாக்களின் தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடுவதை இத்தீர்மானம் கட்டாயமாக்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்