சென்னையில் உள்ள இணையவழி குற்றத் தடுப்பு தலைமையகத்தை தமிழ்நாடு மாநில இணையவழி குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையமாக (TN-S4C) தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
இந்த மையமானது இணையவழிக் குற்ற வழக்குகளில் மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கான மாநில தொடர்பு முகமையாக செயல்படும்.
இணையக் குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் விசாரித்தல் ஆகியவற்றுடன் வழக்குத் தொடர ஆதரவு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு இது துணை புரியும்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தாமாக முன்வந்து வழக்கெடுக்கும் (suo motu) பேராணை உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, குறிப்பாக "டிஜிட்டல் கைது" (Digital Arrest) வழக்குகளின் ஒருங்கிணைப்பு தொடர்பாக இது செயல்படும்.
இத்தகைய மையங்களை மாநில அளவிலான தொடர்பு முகமைகளாக நிறுவுமாறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவிட்டிருந்தது.
TN-S4C அமைப்பானது நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, உளவுத்துறை பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் இணையத் தடயவியல் ஆதரவு ஆகியவற்றை எளிதாக்கும்.