தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் பிப்ரவரி 20, 2026 அன்று நிறைவடைந்தது.
தற்போதைய திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசாங்கத்தின் இறுதிக் கூட்டத் தொடர் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கியது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மாநிலத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இடைக்கால வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பிப்ரவரி 20 அன்று, சட்டமன்றம் 2026–2027 ஆம் ஆண்டிற்கான முன்கூட்டிய மானியக் கோரிக்கை மற்றும் 2025–2026 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவினங்கள் குறித்து விவாதித்தது.
தமிழ்நாட்டில் 2026 கோடையில் பொதுத் தேர்தலை நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.