TNPSC Thervupettagam

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஆணையத்தின் நிதி

August 28 , 2026 16 days 112 0
  • 16-வது நிதி ஆணையம் (FC) 2026-31 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULBs) சிறப்பு உள்கட்டமைப்பு மற்றும் நகரமயமாக்கல் மானியங்கள் தவிர, ₹27,000 கோடிக்கும் மேலாக பரிந்துரைத்துள்ளது.
  • 2026-27 ஆம் ஆண்டு முதல் ₹20,054 கோடி அடிப்படை மானியமாக விடுவிக்கப்படும்.
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்திறன் மானியம் மற்றும் மாநிலச் செயல்திறன் மானியமாக தலா ₹2,507.50 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் இது நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2027-28 ஆம் ஆண்டு முதல் விடுவிக்கப்படும்.
  • கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகராட்சிகள் சிறப்பு உள்கட்டமைப்பு பிரிவின் கீழ் தலா ₹3,500 கோடி வரையிலான திட்டங்களை மேற்கொள்ளலாம்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஒரு முறை நகரமயமாக்கல் பிரீமியமாக ₹2,000 கோடியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது; இது புறநகர் கிராமங்களை அருகிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைப்பதன் மூலம் நகரமயமாக்கலை ஆதரிக்கும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பருவநிலையைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பை அமைப்பதற்காக ₹791 கோடி சிறப்பு மானியத்தையும் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது என ஆதாரத் தகவல்களில் உள்ள அறிக்கை கூறுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்