நிதிநிலை அறிக்கை கண்ணோட்டம் மற்றும் நிதி நிலை
- தமிழக நிதியமைச்சர் என். மரிய வில்சன் அவர்களால் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று சட்டமன்றத்தில் TVK தலைமையிலான அரசின் 2026-27 ஆம் ஆண்டிற்கான முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
- இந்த பட்ஜெட் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள், சுகாதாரம், கல்வி, தொழில்துறைகள், உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.
- தமிழ்நாட்டின் மாநில சொந்த வரி வருவாய் (SOTR) 9.78% வளரும் என கணிக்கப் பட்டு உள்ளது.
- மாநிலத்தின் நிலுவையில் உள்ள கடன் ₹10.99 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- 3,000 கோயில்களின் புனரமைப்புப் பணிகள், கும்பாபிஷேகம் மற்றும் 84 கோயில் தேர்களை சீரமைக்க ₹708 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி, இளைஞர் மற்றும் திறன் மேம்பாடு
- மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவதற்கான வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ₹2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- புதிய பயணம், புதிய வேகம் திட்டத்தின் கீழ், 11 ஆம் வகுப்பு பயிலும் 5.3 லட்சம் மாணவர்களுக்கு தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் மிதிவண்டிகள் வழங்குவதற்காக ₹277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பெருந்தலைவர் காமராஜர் மாதிரிப் பள்ளிகள் இலவச கல்வி, உணவு, தங்குமிடம், சீருடைகள், புத்தகங்கள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக ₹125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் 10,000 பள்ளிகளில் தூய்மை, குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ₹139 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
- பள்ளிக் கல்வித் துறைக்கு ₹44,527 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ₹8,393 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 1 லட்சம் வேலை தேடுபவர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் இளைஞர்களுக்கு உள்ளகப் பயிற்சி வழங்குவதற்காக வெற்றித்திறன் பயிற்சித் திட்டத்திற்கு ₹150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ₹90 கோடி செலவில் ஐந்து புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் (ITI) அமைக்கப்படும், மேலும் ₹50 கோடி செலவில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும்.
- 1 லட்சம் தங்கும் வசதிகளுடன் 200 விடுதிகளை மேம்படுத்துவதற்காக மாணவர் விடுதிகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகம் உருவாக்கப்படும்.
நலத்திட்டங்கள், பெண்கள் மற்றும் சமூக நீதி
- அண்ணன் சீர் திட்டத்தின் கீழ், தகுதியான மணப்பெண்களுக்கு 8 கிராம் (ஒரு சவரன்) தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்குவதற்காக ₹812 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
- தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்குவதற்காக ₹560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தாய் பராமரிப்பு மையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார கண்காணிப்பை வழங்குவதற்காக ₹23 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
- குடிசை வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதற்காக வெற்றி வீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐந்து மாவட்டங்களில் திருநங்கைகளுக்கான அரண் காப்பகங்கள் அமைக்கப்படும்.
- அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான நம்பிக்கை இல்லம் மையங்கள் ₹4 கோடியில் அமைக்கப்படும்.
- ஹஜ் மானியம் ₹25,000 லிருந்து ₹35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ₹1,485 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு
- இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புத்தாக்க நகரமான அறிவகம், ஒரு செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம், குறைக்கடத்தி பரிசோதனை ஆய்வகம், திறன் மையம் மற்றும் புத்தாக்க மையங்களை உள்ளடக்கியதாக இருக்கும்; இதற்கான சாத்தியக்கூறு ஆய்விற்கு ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு திட்டம் (TN AI Mission) சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் குடிமக்கள் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகளை அறிமுகப்படுத்தும்.
- கைவினைஞர்கள் மற்றும் வடிவமைப்பு கல்விக்கு ஆதரவளிப்பதற்காக ₹60 கோடி செலவில் தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம் நிறுவப்படும்.
- குலசேகரப்பட்டினம் விண்வெளி நிலையத்திற்கு அருகே திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் உருவாக்கப்படும்.
- 1,000 குளிர்சாதன வசதி கொண்ட மின்சார மாநகரப் பேருந்துகள் (MTC) வாங்கப்படும், இதற்காக ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ₹50 கோடி ஒதுக்கீட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,000 மின்சார வாகன (EV) மின்னேற்று நிலையங்கள் உருவாக்கப்படும்.
- கோயம்புத்தூர் - அரியலூர் 765 கிலோவோல்ட் (kV) மின்கடத்திப் பாதை திட்டம் சுமார் ₹4,000 கோடி மதிப்பீட்டில் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் செயல் படுத்தப் படும்.
- மூன்றாவது சென்னை பெருந்திட்டமானது (2027-2046) ₹25 கோடி ஒதுக்கீட்டில் தயாரிக்கப் படவுள்ளது.
ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு
- மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டம், சூரியசக்தி தகடுகளை நிறுவும் வீட்டுப் பயனாளிகளுக்கு ₹1 லட்சம் வரை மானியம் வழங்கும்.
- சென்னை நுகர்வோர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 லட்சம் தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோர்களுக்கும் திறன் மீட்டர்கள் பொருத்தப் படும்.
- TN-SHORE திட்டத்தின் மூலம் ₹322 கோடி ஒதுக்கீட்டில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்புநிலங்கள் மீட்டெடுக்கப்படும்.
- மனித-வனவிலங்கு மோதல் தணிப்பு திட்டம் 100 கிராமங்களை உள்ளடக்கும், இதற்காக ₹20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பனை சார்ந்த பொருட்களை ஊக்குவிப்பதற்காக ₹16 கோடியில் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்.
விவசாயம், மீன்வளம், சுகாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி
- காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் முதற்கட்டமாக ₹150 கோடி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்படும்.
- பாரம்பரிய மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் குடும்பத்திற்கு ₹7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இதன் மூலம் 1.93 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள், இதற்காக ₹135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்ற உதவும் மண்ணின் மகள் திட்டத்திற்கு ₹20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கான அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ₹300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பழங்குடியினர் குடியிருப்புகளுக்கான ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ₹250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- முதியோர்களுக்கான நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் ₹33 கோடியில் தொடங்கப்படும் என்பதுடன் இது இலவச சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை வழங்கும்.