தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர்
July 15 , 2021 1492 days 788 0
திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கழகமானது, புத்தகங்களை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையிலும் அச்சிட்டு, வெளியிட்டு மற்றும் விற்பனை செய்யும் பொறுப்பினைக் கொண்டுள்ளது.
இந்தக் கழகமானது ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் திட்டத்திற்கான புத்தகங்களைத் தயார் செய்கிறது.