தமிழ்நாடு அரசு மாநில மின்சாரத் துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டது, அதில் அதன் நிதி நிலை மற்றும் உள்கட்டமைப்பு நிலை ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL), தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் (TNPGCL), தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் (TNGECL) மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கடன் ₹2.47 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
மின் உற்பத்தித் திறனில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, பழையதாகிவிட்ட மின் பகிர்மான மற்றும் கடத்துதல் உள்கட்டமைப்பு மற்றும் மின்சாரத் துறையில் உள்ள 45% மனிதவளப் பற்றாக்குறை ஆகியவற்றை இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மின்சார சேவைகளை மேம்படுத்தும் வகையில் மின் உள்கட்டமைப்பை நவீனப் படுத்துதல், துணை மின் நிலையங்களைப் புதுப்பித்தல் மற்றும் 15,000 ஊழியர்களை பணியமர்த்துதல் ஆகியவற்றை இந்த அறிக்கை முன்மொழிந்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் மின்கட்டண திருத்தம் ஏதும் இருக்காது என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.