இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான 3வது தர்மா கார்டியன் – 2022 (EX DHARMA GUARDIAN-2022) பயிற்சியானது கர்நாடகாவின் பெலகாவி (பெல்காம்) எனுமிடத்தில் நடத்தப் படுகிறது.
இது 12 நாட்கள் நடைபெறும் ஒரு கூட்டுப் பயிற்சியாகும்.
இந்திய இராணுவத்தின் மராத்திய இலகுரக ஆயுதமேந்தியக் காலாட்படைப் பிரிவின் 15வது படைப்பிரிவு மற்றும் ஜப்பானிய தற்காப்பு தரைப் படையின் 30வது காலாட் படைப் பிரிவு ஆகியவை இப்பயிற்சியில் ஈடுபடுகின்றன.
இந்த இராணுவப் பயிற்சியில், காட்டுப்பகுதிகள் மற்றும் பகுதியளவு நகர/நகர்ப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் பற்றி அதிகம் கவனம் செலுத்தப் படும்.