TNPSC Thervupettagam

தற்காலிக சபாநாயகர்

May 13 , 2026 16 hrs 0 min 78 0
  • 17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் எம். வி. கருப்பையா 11 மே 2026 அன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • தற்காலிக சபாநாயகர் என்பது இரண்டு சட்டமன்றங்களுக்கு இடையிலான மாற்றத்தின் போது நியமிக்கப் படும் ஒரு தற்காலிக தலைமை அதிகாரி ஆவார்.
  • "ப்ரோ டெம்" (Pro-tem) என்பதன் பொருள் "தற்காலத்திற்கு" என்பதாகும்.
  • புதிய சட்டமன்றம் அமைப்பதற்கும், நிரந்தர சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கும் இடையே இவர் ஒரு பாலமாகச் செயல்படுகிறார்.
  • புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLAs) பதவிப் பிரமாணம் செய்து வைப்பதே இவரது முக்கியப் பணியாகும்.
  • நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப் படும் வரை இவர் சபையை வழி நடத்துவார்.
  • பொதுவாக, அவையில் அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த உறுப்பினர் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார், இருப்பினும் இது சட்டப்பூர்வமான விதி அல்ல.
  • மாநிலச் சட்டமன்றங்களில் ஆளுநரும், மக்களவையில் இந்தியக் குடியரசுத் தலைவரும் தற்காலிக சபாநாயகரை நியமித்து பதவிப் பிரமாணம் செய்து வைக்கின்றனர்.
  • தற்காலிக சபாநாயகரின் பணிகள் மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியானவை.
  • சபையின் நிரந்தர சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தற்காலிக சபாநாயகரின் பதவி தானாகவே முடிவுக்கு வரும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்