17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் எம். வி. கருப்பையா 11 மே 2026 அன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தற்காலிக சபாநாயகர் என்பது இரண்டு சட்டமன்றங்களுக்கு இடையிலான மாற்றத்தின் போது நியமிக்கப் படும் ஒரு தற்காலிக தலைமை அதிகாரி ஆவார்.
"ப்ரோ டெம்" (Pro-tem) என்பதன் பொருள் "தற்காலத்திற்கு" என்பதாகும்.
புதிய சட்டமன்றம் அமைப்பதற்கும், நிரந்தர சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கும் இடையே இவர் ஒரு பாலமாகச் செயல்படுகிறார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLAs) பதவிப் பிரமாணம் செய்து வைப்பதே இவரது முக்கியப் பணியாகும்.
நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப் படும் வரை இவர் சபையை வழி நடத்துவார்.
பொதுவாக, அவையில் அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த உறுப்பினர் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார், இருப்பினும் இது சட்டப்பூர்வமான விதி அல்ல.
மாநிலச் சட்டமன்றங்களில் ஆளுநரும், மக்களவையில் இந்தியக் குடியரசுத் தலைவரும் தற்காலிக சபாநாயகரை நியமித்து பதவிப் பிரமாணம் செய்து வைக்கின்றனர்.
தற்காலிக சபாநாயகரின் பணிகள் மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியானவை.
சபையின் நிரந்தர சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தற்காலிக சபாநாயகரின் பதவி தானாகவே முடிவுக்கு வரும்.