இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆனது (IRDAI) 24 பேர் கொண்ட ஒரு குழுவினை அமைத்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கான மலிவு விலையிலான மற்றும் விரிவான ஒரு காப்பீட்டுத் திட்டத்தினை உருவாக்கி, அதற்கான பரிந்துரைகளை வழங்குவது இதன் பணியாகும்.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினராக உள்ள தாமஸ் M. தேவாசியா இக்குழுவிற்குத் தலைமை வகிக்க உள்ளார்.
பயன் அடிப்படையிலான அளவுருக் கட்டமைப்பாக விளங்க உள்ள பிமா விஸ்தார் எனப்படுகின்ற முன்மொழியப் பட்டுள்ள காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒரு ஒழுங்கு முறை கட்டமைப்பினை இக்குழுப் பரிந்துரை செய்யும்.