அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம், 22 காரட் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளான 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
அரசு நிறுவனங்களில் பிரசவிக்கும் குழந்தைகள் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர், மேலும் இத்திட்டம் பிறப்பு வரிசையைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிறந்த குழந்தைகளையும் உள்ளடக்கியது.
தகுதியுடையவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை ஒருங்கிணைந்தக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு (PICME) திட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் இனப்பெருக்க மற்றும் குழந்தை சுகாதார (RCH) அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
இத்திட்டம் ஆண்டுதோறும் சுமார் 4,41,667 அரசு மருத்துவமனை பிரசவங்களை உள்ளடக்கும், இதற்காக ஆண்டுக்கு தோராயமாக ரூபாய் 755.83 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) மோதிரங்களைக் கொள்முதல் செய்யும், அவை மையம் மற்றும் ஆரக் கட்டமைப்பின் (hub-and-spoke model) கீழ் நியமிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் மூலம் விநியோகிக்கப்படும்.
இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு ஜூன் 22 முதல் முன் தேதியிட்டுச் செயல்படுத்தப்படும், மேலும் அந்தத் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளும் தகுதி உடையவர்கள் ஆவர்.