TNPSC Thervupettagam

தாலிக்குத் தங்கம் திட்டம்

March 5 , 2026 9 days 134 0
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதி அமர்வு ஆகஸ்ட் 12, 2024 அன்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
  • இந்த உத்தரவு மாதம் ₹12,000 வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு தாலிக்குத் தங்கம் திட்டத்தை நீட்டித்துள்ளது.
  • இந்த வழக்கு 2011 ஆம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்துடன் தொடர்புடையது.
  • இது தாலிக்குத் தங்கம் திட்டம் என்று பிரபலமாக அறியப்படும் இது மாதத்திற்கு ₹6,000க்கும் குறைவான வருமானம் ஈட்டும் குடும்பங்களில் உள்ள இளம் பெண்களின் திருமணத்திற்கு தங்க உதவியினை வழங்குகிறது.
  • மனுதாரர் மாதத்திற்கு ₹6,000க்கும் குறைவாக சம்பாதித்தாரா என்பதை தீர்மானிப்பதைத் தாண்டி, தனி நீதிபதி நீதிப் பேராணை மனுவின் வரம்பை தவறாக விரிவுபடுத்தினார் என்று தீர்ப்பளித்தது.
  • ₹12,000 வருமானம் வரை நன்மையை நீட்டிப்பது ஒரு நிர்வாகக் கொள்கைக்குப் பதிலாக மற்றொரு நிர்வாகக் கொள்கையை மாற்றுவதற்குச் சமம் என்று நீதிமன்றம் கூறியது.
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 226 (உயர் நீதிமன்றங்களின் நீதிப்பேராணை அதிகார வரம்பு) இன் கீழ் அத்தகைய உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று இது தீர்ப்பளித்தது.
  • குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் அடிப்படையில் சலுகைகளை நீட்டிப்பதை கட்டாயமாக்கும் சட்டம் எதுவும் இல்லை என்றும் அமர்வு குறிப்பிட்டது.
  • இந்தக் கொள்கையே நீதிமன்றத்தின் முன் சவாலுக்கு உள்ளாகவில்லை என்பதையும் அது குறிப்பிட்டது.
  • தங்க உதவித் திட்டம் ஆகஸ்ட் 2, 2022 முதல் நிறுத்தப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
  • இது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமாக மறுசீரமைக்கப் பட்டுள்ளது.
  • மனுதாரரின் 2021 விண்ணப்பத்தை, மாதத்திற்கு ₹6,000 க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே பரிசீலிக்க முடியும்.
  • தங்கத்தின் விலை உயர்வு காரணமாக, இந்தத் திட்டத்தை நீட்டிப்பது மாநிலத்திற்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்