50 பில்லியன் டாலர் பொருளாதார உற்பத்தியை அடைவதையும் 500,000 உயர் மதிப்பு மிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் மாநில அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
நான்கு உத்தி சார் திட்டங்கள் தொடங்கப்பட்டன:
கேரள செயற்கை நுண்ணறிவுத் திட்டம் (K-AIM)
கேரள குறைக்கடத்தி உற்பத்தி திட்டம்
கேரள எதிர்கால தொழில்நுட்பத் திட்டம் (KFTM)
தி ஃபியூச்சர் கார்ப்பரேஷன் (TFC).
2030 ஆம் ஆண்டிற்குள் 1,000,000 குடிமக்களுக்கு செயற்கை நுண்ணறிவில் பயிற்சி அளிக்கவும், கேரள AI உரிமைகள் மசோதாவை அறிமுகப்படுத்தவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இயங்குபடம், ஒலி ஒளி, விளையாட்டு மற்றும் கேளிக்கைச் சித்திரம் (AVGC) துறையில் 250 நிறுவனங்களை நிறுவவும், அனைத்து அரசு சேவைகளையும் முழுமையாக டிஜிட்டல் முறையில் வழங்குவதையும் கேரளா நோக்கமாகக் கொண்டுள்ளது.