இந்திய இரயில்வே நிர்வாகமானது “திரிசூல்”மற்றும் “கருடா” எனப்படும் இரண்டு நீண்ட தூரச் சரக்கு (இழுவை) இரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை வழக்கமான சரக்கு இரயில்களின் சாதாரணமான அமைப்பை விட இரண்டு அல்லது பல மடங்கு நீளமானதாகும்.
திரிசூல் என்பது தெற்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் மூன்று சரக்கு இரயில்களை அதாவது 177 பெட்டிகளைக் கொண்ட முதலாவது நீண்ட தூர இரயில் ஆகும்.
இந்த இரயிலானது விஜயவாடா பிரிவின் கொண்டப்பள்ளி என்ற இரயில் நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை இரயில்வே மண்டலத்தின் குர்தா பிரிவு வரை இயக்கப் படுகிறது.
தெற்கு மத்திய இரயில்வே மண்டலமானது இதனைத் தொடர்ந்து “கருடா” எனப்படும் அது போன்ற மற்றொரு இரயிலினை குண்டக்கல் பிரிவின் ராய்ச்சூர் பகுதியிலிருந்து செகந்திரபாத் பிரிவின் மனுகூரு பகுதி வரை இயக்குகிறது.