TNPSC Thervupettagam

திருத்தப்பட்ட பொருளாதார மூலதனக் கட்டமைப்பு 2025

June 2 , 2025 8 days 52 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, அதன் பொருளாதார மூலதனக் கட்டமைப்பு (ECF) மற்றும் இடர் வழங்கல் விதிமுறைகளை திருத்துவதன் மூலம் அதன் நிதி சார் மீள்தன்மையை வலுப்படுத்த ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
  • இந்தத் திருத்தமானது பிமல் ஜலான் குழு பரிந்துரைத்தபடி, ஐந்து ஆண்டு காலக் கட்ட மதிப்பாய்வைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதலாவது ECF ஆனது, சுமார் ஐந்து ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது அதன் பல்வேறு அபாயங்களை ஈடு கட்டுவதற்கு வேண்டி எவ்வளவு மூலதனத்தைப் பேண வேண்டும் மற்றும் அதன் உபரி வருமானத்தில் எந்த அளவு இந்திய அரசாங்கத்திற்கு மாற்றப் படலாம் என்பதை இந்த ECF நிர்வகிக்கிறது.
  • இந்தப் புதிய கட்டமைப்பு ஆனது சுமார் 4.5-7.5 சதவீத எதிர்பாராத இடர் இடையக (CRB) வரம்பை அனுமதிக்கிறது என்பதோடு இது அதன் முந்தைய 5.5-6.5 சதவீத வரம்பில் இருந்து விரிவுபடுத்தப்பட்டதாகும்.
  • 2019 ஆம் நிதியாண்டு முதல் 2022 ஆம் நிதியாண்டு வரையில், RBI ஆனது 5.50 சதவீத CRB என்ற வரம்பை பேணியது.
  • 2023 ஆம் நிதியாண்டில், இது சுமார் 6 சதவீதமாகவும், 2024 ஆம் நிதியாண்டில் சுமார் 6.5 சதவீதமாகவும் அதிகரித்தது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியமானது, 2024-25 ஆம் நிதியாண்டிற்கு இந்திய அரசாங்கத்திற்கு என தோராயமாக 2.69 டிரில்லியன் டாலர் உபரி பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்