மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாகூர், தேசியத் திரைப்பட பாரம்பரியத் திட்டத்தின் கீழ், உலகின் மிகப்பெரிய திரைப்பட மீள்புதுப்பித்தல் திட்டம் ஒன்றினை அறிவித்தார்.
தேசியத் திரைப்படப் பாரம்பரியத் திட்டத்தின் கீழ், சுமார் 2,200 திரைப்படங்கள் மீள் புதுப்பிக்கப் படும்.
திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஆவணப்படத் தயாரிப்பாளர்கள், திரைப்பட வரலாற்றாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்களைக் கொண்ட மொழி வாரியான குழுக்களால் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
அபர்ணா சென், ஸ்ரீராம் ராகவன், அஞ்சலி மேனன் மற்றும் வெற்றிமாறன் போன்ற பிரபலத் திரையுலகப் பிரமுகர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.