TNPSC Thervupettagam
July 8 , 2026 16 hrs 0 min 19 0
  • மகாபாரதத்தின் இசை விவரிப்பை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய சத்தீஸ்கர் நாட்டுப்புறக் கலை வடிவமான பாண்டவானியின் புகழ்பெற்ற கலைஞரான தீஜன் பாய் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் தனது 70 வயதில் காலமானார்.
  • தீஜன் பாய் 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் உள்ள கணியாரி கிராமத்தில் பிறந்த அவர் தனது தாய்வழி தாத்தாவான பிரஜ்லால் பர்தாவிடம் பாண்டவானியின் ஆரம்ப கால பயிற்சியைப் பெற்றார்.
  • பாரம்பரியமாக அமர்ந்தவாறு நிகழ்த்தப்படும் வேதமதி பாணியைப் போலல்லாமல், நின்று கொண்டு, நடிப்பு, வசனம், பாவனைகள் மற்றும் பாடலுடன் நிகழ்த்தும் பாண்டவானியின் காபாலிகா பாணியை அவர் பிரபலப்படுத்தினார்.
  • பத்மஸ்ரீ (1988), பத்ம பூஷன் (2003) மற்றும் பத்ம விபூஷன் (2019) உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய குடிமக்கள் விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
  • சத்தீஸ்கரின் பாரம்பரிய நாட்டுப்புற நாடக மற்றும் இசையுடன் கூடிய கதை சொல்லல் வடிவமான பாண்டவானி தம்புரா (நரம்பு வாத்தியம்) போன்ற இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இந்திய இதிகாசமான மகாபாரதத்தின் நிகழ்வுகளை விவரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்