தீர்ப்பாயங்களுக்கான நியமனம் - நிதியியல் சட்டம், 2017
November 23 , 2019 2022 days 754 0
தீர்ப்பாயங்களுக்கான நியமனங்கள் "தற்பொழுது ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும்" என்றும் 2017 ஆம் ஆண்டின் நிதியியல் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் இருக்கக் கூடாது என்றும் ஒரு இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் போன்ற நீதிமன்றத் தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களின் நியமனங்கள், அவர்களை நீக்குதல் மற்றும் அவர்களின் பணி நிலைமைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை 2017 ஆம் ஆண்டின் நிதியியல் சட்டம் மத்திய அரசிற்கு வழங்கியிருந்தது.
மனுதாரர்கள் ரோஜர் மேத்யூ மற்றும் வருவாய்ப் பிரிவுக் கழகம் ஆகியோர் 2017 ஆம் ஆண்டின் நிதியியல் சட்டத்தை, அதிலும் குறிப்பாக பகுதி XIV என்ற பகுதியைப் பல்வேறு காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் அவற்றை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்தச் சட்டத்தின் பகுதி XIV ஆனது பல்வேறு மத்தியச் சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட 26 தீர்ப்பாயங்களின் நிர்வாகம் தொடர்பான விதிகளை ரத்து செய்து அவற்றை நீக்கி இருக்கின்றது. பிரிவு 184ன் படி விதிகளை வடிவமைக்கும் அதிகாரங்களை அச்சட்டம் மத்திய அரசிற்கு வழங்கியது.
நீதிமன்றம் இது பொருந்தாது என்று அறிவித்து, புதிய விதிகளை வகுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது.