தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம் – ஆகஸ்ட் 21
August 24 , 2018 2943 days 915 0
ஜ.நா பொதுச் சபை ஆனது ஆகஸ்ட் 21ம் தேதியை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்தல் மற்றும் அஞ்சலி செலுத்துதல் ஆகியவற்றுக்கான சர்வதேச தினமாக நிறுவியுள்ளது.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பி பிழைத்தவர்களை கௌரவிக்கவும் ஆதரவளிக்கவும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை அவர்கள் முழுமையாக அனுபவிப்பதை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.