அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளுக்கான தீவுகள் பாதுகாப்பு மண்டல (IPZ) விதிகளை மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது.
IPZ அறிவிப்பின் (2011) கீழான அனுமதியின் செல்லுபடியாகும் காலம் 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது 2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிவிப்பு உடன் ஒத்துப் போகிறது.
இந்தப் புதிய விதிகளானது, புதிய ஒப்புதல்களின் தேவையில்லாமல் இதர பல சட்ட நிறுவனங்களுக்கிடையில் அனுமதிகளை மாற்றவும் அவற்றைப் பிரித்து அளிக்கவும் அனுமதிக்கின்றன.
தீவுகள் பாதுகாப்பு மண்டலம் ஆனது கடலோரப் பகுதிகளை சுற்றுச்சூழல் உணர் திறன் அடிப்படையில், தொழில்துறை உருவாக்கத்திற்கான மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நான்கு தீவு கடலோரப் பிராந்திய மண்டலங்களாக (ICRZ-I முதல் ICRZ-III மற்றும் நீர்நிலைப் பகுதிகள்) வகைப்படுத்துகிறது.