2019-20 ஆம் ஆண்டிற்கான துவரைப் பருப்பு இறக்குமதியை 2 இலட்சம் மெட்ரிக் டன்களிலிருந்து 4 இலட்சம் மெட்ரிக் டன்களாக அதிகரிக்க மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது இருப்பில் உள்ள 2 இலட்சம் மெட்ரிக் டன்கள் துவரைப் பருப்பை விலை நிலைப்படுத்துதல் நிதியத்தின் (Price Stabilization Fund) கீழ் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றிற்கு வழங்கும்.
இந்த நடவடிக்கையானது 2018-19 ஆம் ஆண்டில் துவரைப் பருப்பு உற்பத்தி வீழ்ச்சியை ஈடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.