TNPSC Thervupettagam

தூய்மை என்பது சேவை (ஸ்வச்தா ஹை சேவா) 2019 - நெகிழிப் பயன்பாடு

September 13 , 2019 2115 days 710 0
  • ஸ்வச்தா ஹை சேவா 2019 ஆனது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று  பிரதமர் நரேந்திர மோடியால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் தொடங்கப் பட்டது.
  • இந்தப் பிரச்சாரத்தின் கருப்பொருள் ‘நெகிழிக் கழிவு குறித்த  விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை’ என்பதாகும்.
  • இது செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 1 வரை நெகிழிக் கழிவு மேலாண்மை குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அக்டோபர் 2 ஆம் தேதியன்று நெகிழிக் கழிவுகளின் சேகரிப்பு மற்றும் அவற்றைப் பிரித்தெடுக்கப் படுவதற்கான ஒரு நாடு தழுவிய பிரச்சாரமும் நடைபெறும்.
  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிக்கு முன் சேகரிக்கப்பட்ட நெகிழிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு அவை திறம்பட அகற்றப்படும்.
  • ஸ்வச்தா ஹை சேவா 2019ஐ அறிமுகப்படுத்திய பின்னர், பிரதமர் மோடி பசுதான் ஆரோக்கிய விக்யான் மேளாவைப் பார்வையிட்டார்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், மாடுகளின் வயிற்றில் இருந்து நெகிழிக் கழிவுகளை அகற்றுவதற்காக அவைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்