தெலுங்கானா மாநிலம் தனது அவசர கால உதவி மற்றும் இணையவழிக் குற்ற மேலாண்மை உள்கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளைப் பயன்படுத்தியுள்ளது.
தேவையற்ற மின்னஞ்சல் மற்றும் தேவையற்ற அழைப்புகளைத் தடை செய்ய 112 அவசர கால உதவி அமைப்பு மற்றும் 'டயல் 100' காவல் உதவி எண்களில் தெலுங்கானா AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
1930 இணைய வழிக் குற்ற உதவி எண் ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளை ஆதரிக்கும் AI குரல் வழி உதவியாளரைப் பயன்படுத்துகிறது.
இந்த AI அமைப்பு அழைப்புகளை ஒழுங்கமைக்கப்பட்ட அறிக்கைகளாக மாற்றுகிறது மற்றும் மோசடி தொடர்பான நிதியை விரைவாக முடக்க உதவுகிறது.
தெலுங்கானா இணையவழிப் பாதுகாப்பு பணியகம், இணையவழிக் குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை விசாரணைகளுக்காக C-SIGHT AI தளத்தைத் தொடங்கியுள்ளது.
தெலுங்கானா தரவுப் பரிமாற்றம் (TGDeX) என்பது AI பயன்பாடுகளுக்கான இந்தியாவின் முதலாவது மாநில அளவிலான 'டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாக' திட்டமிடப் பட்டுள்ளது.