4வது மற்றும் 5வது தேசிய குடும்பநல சுகாதாரக் கணக்கெடுப்புகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஒரு பெண் சராசரியாக பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையான மொத்தக் கருவுறுதல் விகிதமானது, தேசிய அளவில் 2.2 என்ற அளவிலிருந்து 2.0 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் பீகார் (2.98), மேகாலயா (2.91), உத்தரப் பிரதேசம் (2.35), ஜார்க்கண்ட் (2.26) மணிப்பூர் (2.17) ஆகியவை 2.1 என்ற கருவுறுதல் மீட்சி அளவுக்கு மேல் உள்ள ஐந்து மாநிலங்கள் ஆகும்.
இந்தியாவில் மருத்துவமனையில் நிகழும் பிறப்புகள் 79% என்ற அளவிலிருந்து 89% என்ற அளவாக பதிவாகி உள்ளது.
இது கிராமப்புறங்களில் 87% ஆகவும், நகர்ப்புறங்களில் 94% ஆகவும் பதிவாகியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில், இந்தியாவிலுள்ள ஐந்து வயதுக்குட்பட்டக் குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலையானது 38% என்ற அளவிலிருந்து 36% ஆக குறைந்துள்ளது.
வங்கி அல்லது சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 53 சதவீதத்திலிருந்து 79% ஆக அதிகரித்துள்ளது.
6வது தேசியக் குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பை 2023-24 ஆம் ஆண்டில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.