தேசியக் கௌரவ அவமதிப்புத் தடுப்பு (திருத்த) மசோதா, 2026
July 28 , 2026 2 days 39 0
தேசியக் கௌரவ அவமதிப்புத் தடுப்பு (திருத்த) மசோதா, 2026, மத்திய உள்துறை அமைச்சரால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த மசோதாவானது, தேசியப் பாடல் (வந்தே மாதரம்) என்பதை அதன் பாதுகாப்பின் கீழ் சேர்ப்பதன் மூலம், 1971 ஆம் ஆண்டின் தேசியக் கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முற்படுகிறது.
தேசியக் கொடி, அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதத்தைப் போன்று தேசியப் பாடலுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
தேசிய கீதம் அல்லது தேசியப் பாடலைப் பாடுவதை வேண்டுமென்றே தடுப்பவர்கள் அல்லது அத்தகைய கூட்டங்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கும் தண்டனையை இந்த மசோதா முன்மொழிகிறது.
வந்தே மாதரம் பாடலானது 1875 ஆம் ஆண்டில் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப் பட்டு, பின்னர் அவரது 'ஆனந்தமடம்' (1882) என்ற நாவலில் வெளியிடப்பட்டது.
ஜன கண மன பாடலுக்கு இணையான அந்தஸ்து வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்கப் பட வேண்டும் என்ற டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் அறிக்கையை (1950 ஆம் ஆண்டு ஜனவரி 24) இந்த மசோதா குறிப்பிடுகிறது.