TNPSC Thervupettagam

தேசியச் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு

September 29 , 2022 1045 days 510 0
  • தேசியச் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடானது குஜராத்தில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டின் நோக்கம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பானப் பிரச்சினைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்தப் பணியை ஊக்குவிப்பதன் மூலம் கூட்டுறவுக் கூட்டாட்சி முறையை மேம்படுத்துவதாகும்.
  • இந்த மாநாட்டில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய துறைகளுடன் 6 கருத்துரு கொண்ட அமர்வுகள் மேற்கொள்ளப் பட்டன.
    • LiFE, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்தல் (உமிழ்வைத் தணித்தல் மற்றும் பருவ நிலைத் தாக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் ஆகியவற்றிற்காக, பருவநிலை மாற்றம் குறித்த அரசு செயல் திட்டங்களைப் புதுப்பித்தல்);
    • பரிவேஷ் (ஒருங்கிணைந்தப் பசுமை சார்ந்தத் திட்ட அனுமதிகளுக்கான ஒற்றைச் சாளர அமைப்பு);
    • வன மேலாண்மை;
    • மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு;
    • வனவிலங்கு மேலாண்மை;
    • நெகிழி மற்றும் கழிவு மேலாண்மை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்