மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்துறை அமைச்சகமானது 2019 ஆம் ஆண்டின் தேசியத் தொழில்முனைவு விருதுகளின் 4-வது பதிப்பை அறிவித்துள்ளது.
இந்த வருடாந்திர விருதானது தொழில்முனைவோர் வளர்ச்சியில் தலைசிறந்த இளம் வயது, முதல் தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் சூழலியல் கட்டமைப்பாளர்களின் தனித்துவ பங்களிப்பிற்காக, அவர்களை கௌரவப் படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது.
இந்த விருதைப் பெறுவதற்கு தொழில்முனைவோர்கள் பின்வருவனவற்றைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
கண்டிப்பாக 40 வயதிற்குக் கீழே இருக்க வேண்டும்.
கட்டாயம் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும்.
வர்த்தகத்தில் 51 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட பங்கு மற்றும் உரிமையை வைத்திருக்க வேண்டும் (பெண் தொழில் முனைவோர்கள் 75% உரிமை).