டிசம்பர் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை ராய்ப்பூரில் மூன்று நாள் நடைபெறும் தேசியப் பழங்குடியின நடனத் திருவிழாவை சத்தீஸ்கர் அரசு நடத்தவுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான அழைப்பானது அனைத்து மாநிலங்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கின்றது.
நாடு முழுவதும் இருந்து சுமார் 2,500 பழங்குடியினக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றார்கள்.
இந்த விழாவானது பழங்குடியினச் சமூகத்தின் திருமணம், பயிர் அறுவடை, பாரம்பரிய திருவிழா மற்றும் பிற நிகழ்ச்சிகள் தொடர்பான நடன நிகழ்வுகளையும் பிரதிபலிக்க இருக்கின்றது.