NATGRID திட்டத்தின் கீழ், குடியேற்ற நுழைவு & வெளியேறுதல், வங்கி மற்றும் தொலைபேசி விவரங்கள் தொடர்பான பதிவுகளின் தரவுத் தளத்துடன் “சமூக ஊடகக் கணக்குகளை இணைக்க" மத்திய அரசாங்கம் முன்மொழிகின்றது.
NATGRID தரவுத் தளமானது தொலைத் தொடர்பு, வரி தொடர்பான கோப்புகள், வங்கி, குடியேற்றம் போன்ற துறைகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தகவல்களைத் தொகுக்கும்.
நுண்ணறிவுப் பிரிவு, RAW உளவு அமைப்பு (Research and Analysis Wing) போன்ற குறைந்தது 10 மத்திய நிறுவனங்கள் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளுக்காக இந்தப் பாதுகாக்கப்பட்ட தளத்தில் உள்ள தரவை அணுகும்.
இந்தத் திட்டமானது 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.