TNPSC Thervupettagam

தேசியப் புலனாய்வு அமைப்பு (திருத்த) மசோதா

July 17 , 2019 2121 days 1771 0
  • மக்களவையானது 2019 ஆம் ஆண்டின் தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA - National Investigation Agency) திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • பின்வரும் குற்ற வழக்குகள் NIA வினால் விசாரணை செய்ய முடியும்.
    • ஆள் கடத்தல்
    • போலி நாணயங்கள் மற்றும் வங்கிப் பணம் தொடர்பான குற்றங்கள்
    • தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை
    • இணைய வழிக் குற்றம்
    • வெடி பொருள் சட்டம், 1908 -ன் கீழுள்ள குற்றங்கள்
  • இந்தியா முழுவதும், இதுபோன்ற குற்றங்களை விசாரிப்பது தொடர்பாக மற்ற காவல் துறை அதிகாரிகளைப் போல NIA அதிகாரிகளும் அதிகாரங்களைக் கொண்டு இருப்பர்.
  • இந்த வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக அதற்கான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். நீதிபதிகளின் நியமனங்கள் இடமாறுதல்/தாமதம் ஆகியவற்றின் மூலம் இந்த வழக்குகள் தாமதமாகாது.
  • வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் சொத்துகள் மற்றும் இந்தியத் தூதரகங்களுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் குறித்தும் இந்த அமைப்பு விசாரிக்கும்.
NIA பற்றி
  • NIA ஆனது மத்திய தீவிரவாதத் தடுப்புச் சட்ட அமலாக்க அமைப்பாக செயல்படுவதற்கு 2008 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
  • மாநிலங்களில் இருந்து சிறப்பு அனுமதி இல்லாமல் மாநிலங்களில் தீவிரவாதம் தொடர்பான குற்றங்களை விசாரிக்க இந்த அமைப்புக்கு அதிகாரம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்