மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியுஷ் கோயல் அவர்கள் ‘தேசியப் பொதுக் கொள்முதல் மாநாடு 2020 : டிஜிட்டல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு’ என்ற ஒரு கருத்தரங்கின் 4வது பதிப்பைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இந்தப் பதிப்பின் கருத்துரு, “திறன், வெளிப்படைத் தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்குதலை நோக்கிய – தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் அரசுக் கொள்முதல்” என்பதாகும்.
இது ஹைவ்ஸ் என்ற ஒரு டிஜிட்டல் தளத்தின் மூலம் இந்தியத் தொழிற்துறைக்கூட்டமைப்புடன் (Confederation of Indian Industry) இணைந்து அரசு மின்னணுச் சந்தையினால் நடத்தப் பட்டது.