TNPSC Thervupettagam

தேசியப் போர் நினைவுச்சின்னம்

March 7 , 2022 1250 days 602 0
  • தேசியப் போர் நினைவுச் சின்னத்தின் 3வது ஆண்டு விழா 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • தேசியப் போர் நினைவுச் சின்னம் ஆனது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25  அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
  • தேசியப் போர் நினைவுச் சின்னமானது, சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற ஆயுதம் ஏந்திய மோதல்களில் பங்கேற்றுப் போராடிய அனைத்து வீரர்களையும் கௌரவிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் போர் நினைவுச் சின்னம் ஆகும்.
  • 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய-சீனப் போரிலும், 1947, 1965 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போர்களிலும், 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரிலும் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இந்த நினைவிடம் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்