இதில் 5 ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனுபவ் விருதிற்கும் மற்றும் 10 ஓய்வு பெற்ற பணியாளர்கள் சாதனை சான்றிதழ்களுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் தேசிய அனுபவ் விருதுகள் திட்டத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவாக்கத்தை இது குறிக்கிறது.
மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE) மற்றும் பொதுத்துறை வங்கிகள் (PSB) ஆகியவற்றின் ஊழியர்கள் முதல் முறையாக மத்திய அரசு ஊழியர்களுடன் இதில் கலந்து கொள்வதற்கு தகுதி பெறும் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலத் துறையானது 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘அனுபவ்’ என்ற ஓர் இயங்கலை தளத்தை அறிமுகப்படுத்தியது.
இது அரசாங்கத்தில் பணிபுரியும் போது ஓய்வு பெறும் அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
இந்த வருடாந்திர விருதுகள் திட்டமானது, ஓய்வு பெறும் / ஓய்வு பெற்ற ஊழியர்கள், தங்கள் அனுபவங்களை எழுதுவதன் மூலம் தங்கள் அனுபவத்தினைச் சமர்ப்பிக்க ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
இது வரையில் 59 அனுபவ் விருதுகள் மற்றும் 19 சாதனை சான்றிதழ்கள் வழங்கப் பட்டு உள்ளன.