தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டதன் 50 ஆம் ஆண்டு நிறைவு
June 22 , 2025 8 days 65 0
இந்த ஆண்டானது 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியன்று அவசரநிலை அமல் படுத்தப் பட்டதன் 50 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இது 1975 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு அறிவிக்கப்பட்டது.
1971 ஆம் ஆண்டில் நாட்டின் அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தியின் மக்களவைத் தேர்வினை நீதிமன்றம் ரத்து செய்தது.
21 மாத காலம் நீண்ட தேசிய அவசரநிலையானது 1977 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி அன்று நீக்கப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்புக் காரணம் அல்லது அதன் ஒரு பகுதியானது போர், வெளிப் புறத் தாக்குதல் (இது வெளிப்புற அவசரநிலை) அல்லது ஆயுதக் கிளர்ச்சி (உள்நாட்டு அவசர நிலை) ஆகியவற்றால் அச்சுறுத்தப்படும்போது, 352வது சரத்தின் கீழ் குடியரசுத் தலைவரால் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப் படுகிறது.
இது 6 மாதங்களுக்கு நீடிக்கும் என்பதோடு மேலும் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் காலவரையின்றி நீட்டிக்கப் படலாம்.
1975 ஆம் ஆண்டு 38வது திருத்தச் சட்டம் ஆனது, போர், வெளிப்புறத் தாக்குதல், ஆயுதம் ஏந்திய ஒரு கிளர்ச்சி அல்லது எதிர்வரும் அபாயம் ஆகியவற்றின் ஒரு அடிப்படையில் குடியரசுத் தலைவரால் அவசரகால பிரகடனங்களை அறிவிக்க அனுமதிக்கிறது.
ஆனால், இங்கு 1978 ஆம் ஆண்டு 44வது திருத்தச் சட்டம் ஆனது, "உள்நாட்டுக் கலவரம்" என்பதை "ஆயுதமேந்தியக் கிளர்ச்சி" என்று மாற்றியது.