தேசிய இணையவழிப் பாதுகாப்பு சார்ந்த சம்பவங்களுக்கான எதிர்ப்புப் பயிற்சி
April 22 , 2022 1466 days 580 0
அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியமான துறையின் நிறுவனங்களுக்காக தேசிய இணைய வழிப் பாதுகாப்பு சார்ந்த சம்பவங்களுக்கான ஒரு எதிர்ப்பு பயிற்சியினைத் தேசியப் பாதுகாப்புச் சபை செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டின் இணைய நிலைப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு நோக்கத்துடன் இது ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தேசிய இணையவழிப் பாதுகாப்பு சார்ந்த சம்பவங்களுக்கான எதிர்ப்புப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.