தேசிய உளவுத்துறை கட்டமைப்பு (National Intelligence Grid – NATGRID) திட்டமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செயல்பட உள்ளது.
2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு இது தொடங்கப்பட்டது.
NATGRID அமைப்பானது உளவுத்துறை மற்றும் விசாரணை அமைப்புகளை இணைக்கின்றது.
உளவுத்துறை உள்ளீடுகளை உருவாக்குவதற்காக தொலைத் தொடர்பு, வரிப் பதிவேடுகள், வங்கி, குடியேற்றம் உள்ளிட்ட 21 தரவு வழங்கும் நிறுவனங்களிலிருந்துப் பெறப்படக் கூடிய 10 பயனர் நிறுவனங்கள் சில தரவு தளங்களுடன் சுயாதீனமாக இணைக்கப்பட இருக்கின்றன.
NATGRID அமைப்பின் தரவு மீட்பு மையமானது பெங்களூரு, கர்நாடகாவில் கட்டப் பட்டுள்ளது. அதன் தலைமையகத்தின் கட்டுமானமானது டெல்லியில் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
நிகழ்நேர அடிப்படையில் NATGRID அமைப்பின் தரவை அணுகக்கூடிய 10 முகவர்கள் பின்வருமாறு:
உளவுத்துறை (Intelligence Bureau - IB)
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research & Analysis Wing - R&AW)
மத்தியப் புலனாய்வு பிரிவு (Central Bureau of Investigation - CBI)