TNPSC Thervupettagam

தேசிய உளவுத்துறை கட்டமைப்பு (NATGRID)

December 4 , 2019 2014 days 845 0
  • தேசிய உளவுத்துறை கட்டமைப்பு (National Intelligence Grid NATGRID) திட்டமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செயல்பட உள்ளது.
  • 2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு இது தொடங்கப்பட்டது.
  • NATGRID அமைப்பானது உளவுத்துறை மற்றும் விசாரணை அமைப்புகளை இணைக்கின்றது.
  • உளவுத்துறை உள்ளீடுகளை உருவாக்குவதற்காக தொலைத் தொடர்பு, வரிப் பதிவேடுகள், வங்கி, குடியேற்றம் உள்ளிட்ட 21 தரவு வழங்கும் நிறுவனங்களிலிருந்துப் பெறப்படக் கூடிய 10 பயனர் நிறுவனங்கள் சில தரவு தளங்களுடன் சுயாதீனமாக இணைக்கப்பட இருக்கின்றன.
  • NATGRID அமைப்பின் தரவு மீட்பு மையமானது பெங்களூரு, கர்நாடகாவில் கட்டப் பட்டுள்ளது. அதன் தலைமையகத்தின் கட்டுமானமானது டெல்லியில் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
  • நிகழ்நேர அடிப்படையில் NATGRID அமைப்பின் தரவை அணுகக்கூடிய 10 முகவர்கள் பின்வருமாறு:
    • உளவுத்துறை (Intelligence Bureau - IB)
    • ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research & Analysis Wing - R&AW)
    • மத்தியப் புலனாய்வு பிரிவு (Central Bureau of Investigation - CBI)
    • அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate - ED)
    • வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence - DRI)
    • நிதியியல் நுண்ணறிவுப் பிரிவு (Financial Intelligence Unit - FIU)
    • மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT)
    • மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் (Central Board of Excise and Customs - CBEC)
    • மத்திய கலால் மற்றும் நுண்ணறிவு இயக்குநரகம் (Directorate General of Central Excise and Intelligence - DGCEI)
    • போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (Narcotics Control Bureau - NCB)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்