தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் (NMDC), 2025-26 ஆம் நிதியாண்டில் 50 மில்லியன் டன் இரும்புத் தாதுவை உற்பத்தி செய்த இந்தியாவின் முதல் சுரங்க நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இது எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு 'நவரத்னா' மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.
தேசியக் கனிம மேம்பாட்டுக் கழகம் (NMDC) 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இதன் தலைமையகம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.
சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகாவில் முக்கியச் சுரங்கங்களை இயக்கி வரும் இது, இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளராகத் திகழ்கிறது.
மத்தியப் பிரதேசத்தின் பன்னாவில் உள்ள இந்தியாவின் ஒரே இயந்திரமயமாக்கப் பட்ட வைரச் சுரங்கத்தையும் இது இயக்கி வருகிறது.