TNPSC Thervupettagam

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை 2017 - இந்தியாவில் குற்றம்

October 23 , 2019 2096 days 1333 0
  • 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் குற்றம் (Crime in India) என்ற அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau - NCRB) வெளியிட்டுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 6,986 வழக்குகளுடன் ஒப்பிடும் போது, 2017 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 9,013 ஆக இருந்தது.
  • இந்த வழக்குகளின் அதிகபட்ச எண்ணிக்கை பின்வரும் மாநிலங்களில் பதிவாகியுள்ளது.
    • ஹரியானா (2,576)
    • உத்தரப் பிரதேசம் (2,055)
    • தமிழ்நாடு (1,802)
  • இந்த அறிக்கை "அரசுக்கு எதிரான குற்றங்கள்" என்று பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அதன் எண்ணிக்கை 30 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
  • இந்தியாவில் வகுப்புவாதக் கலவரங்களின் எண்ணிக்கையானது  2016 ஆம் ஆண்டில்  869 ஆக இருந்து 2017 ஆம் ஆண்டில் 723 ஆக குறைந்து விட்டது என்பதையும் இது காட்டுகிறது. ஆனால் இந்தக் கலவரத்தால் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • வெறுக்கத்தக்க குற்றங்களில் 43% பங்கைக் கொண்டு, சிறுபான்மையினர் மற்றும்  தலித்துகளுக்கு மிகவும் பாதுகாப்பற்ற மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது.
  • மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு கைதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, பத்திரிகையாளர், இடித்துரைப்பாளர், சமூக சேவையாளர் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் NCRBயில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் அவை தெளிவற்ற / நம்ப முடியாத தரவுகளைக் கொண்டுள்ளன.
குற்றங்களின் புதிய வகை – இணைய வழிக் குற்றங்கள், பெண்களின் பாதுகாப்பு
  • இரண்டு வருட தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட NCRB அறிக்கையில், பணியிடத்தில்/பொதுப் போக்குவரத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 88 புதிய வகை குற்றங்கள் அடங்கியுள்ளன.
  • "ஜிகாதி பயங்கரவாதிகள், இடதுசாரித்  தீவிரவாதம் மற்றும் வடகிழக்கு கிளர்ச்சியாளர்கள்" ஆகியோரது விவரங்களை உள்ளடக்கிய "தேச விரோதக் கூறுகள்" என்ற புதிய வகை ஒன்று தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
  • முதன்முறையாக, “இணைய வழி அச்சுறுத்தல் மற்றும் பெண்களை கொடுமைப் படுத்துதல்” ஆகியவை இந்த அறிக்கையில் சேர்க்கப் பட்டுள்ளன.
  • இந்தப் பிரிவின் கீழ் மொத்தம் 542 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்ச சம்பவங்கள் மகாராஷ்டிராவில் (301) பதிவாகியுள்ளன.
  • 11,601 பேர் பல்வேறு இணைய வழிக் குற்றங்களிலும் 8,306 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையிலும் குற்றப் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சம்பந்தமான தரவு
கலவரங்கள்
  • 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த மொத்த கலவர வழக்குகளில் தமிழகம் 3.28 சதவீத பங்கைக் கொண்டிருந்தது. ஆனால் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் தமிழகம் 21 சதவீதம் பங்கைக் கொண்டிருந்தது.
  • கலவரத்தைப் பொறுத்தவரை பஞ்சாப் மிகவும் அமைதியானது. ஏனெனில் இது ஒரு வழக்கை மட்டுமே பதிவு செய்துள்ளது.
சாலை விபத்துகள்
  • 2017 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • தமிழகம் தற்போது சாலை விபத்துத் தரவு மேலாண்மை அமைப்பு (RADMS - Road Accidents Data Management System) என்ற அமைப்பைப் பயன்படுத்துகிறது. இது ஒவ்வொரு விபத்தையும் உடனடியாக பதிவு செய்து வலையமைப்பில் பதிவேற்றுவதை உறுதி செய்கிறது.
தேசத் துரோக வழக்குகள்
  • அஸ்ஸாம் அதிக எண்ணிக்கையிலான தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களும் அதிக எண்ணிக்கையிலான தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்துள்ளன.
கைதிகள்
  • மொத்தம் 2,096 இந்திய சிறைக் கைதிகளில் 2,039 ஆண்களும் 57 பெண்களும் அடங்கியுள்ளனர்.  தமிழ்நாடு அதிக எண்ணிக்கையிலான கைதிகளைக் (810) கொண்டு உள்ளது.
மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள்
  • மூத்த குடிமக்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களை, குறிப்பாக கொலைகளைப் பதிவு செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  • பெரியவர்களைக் குறி வைத்து கொள்ளை மற்றும் நகை பறிப்பு சம்பவங்களைப் புகாரளிப்பதில் மகாராஷ்டிராவிற்குப் பிறகு தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பான குற்றங்கள்
  • இந்தியாவில் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் குற்றங்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் 4,732 ஆக இருந்து, 2017 ஆம் ஆண்டில்  42,143 ஆக அது உயர்ந்துள்ளது.
  • இந்த குற்றங்களில் கிட்டத்தட்ட பாதி அளவில் (20,914) 49.6 சதவீத குற்றங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன.
  • சிகரெட் மற்றும் பிற புகையிலைப்  பொருட்கள் சட்டம்  2003, என்ற சட்டம் சுற்றுச்சூழல் குற்றங்களின் பட்டியலில் சேர்க்கப் பட்டதன் காரணமாக குற்றங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்