புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய தொழில் முனைவோர் விருதுகள் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் வழங்கப்பட்டன.
30 இளம் தொழில் முனைவோர்கள் மற்றும் 3 தொழில்முனைவோருக்கான சூழலைக் கட்டமைப்போர் என மொத்தம் 33 நபர்கள் விருது வழங்கப்பட்டனர்.
முதல் தலைமுறை இளம் தொழில்முனைவோர் மற்றும் தொழில்முனைவோருக்கான சூழலைக் கட்டமைக்கும் பங்களிப்பாளர்கள் ஆகியோரை சிறந்த முறையில் அங்கீகரிப்பதும் கௌரவிப்பதும் இதன் நோக்கமாகும்.
2016 ஆம் ஆண்டில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் இந்த விருது உருவாக்கப்பட்டது.