TNPSC Thervupettagam

தேசிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

August 16 , 2026 2 days 43 0
  • மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) புதிய தேசிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • சர்வதேச எல்லைக்கு 1 கி.மீ சுற்றளவுக்குள் சூரிய சக்தி, காற்று மற்றும் கலப்பு (hybrid) புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது; அதேவேளையில், 50 கி.மீ தொலைவு வரை அமைந்துள்ள திட்டங்களுக்குப் பாதுகாப்பு அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • இந்த எல்லைப் பகுதிகளில் கட்டுப்பாட்டுக் கோடு (LoC), உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) மற்றும் சர்வதேச எல்லை (IB) ஆகியவை அடங்கும்.
  • LoC, LAC மற்றும் IB ஆகியவற்றிலிருந்து 20 கி.மீ தொலைவுக்குள் முன்மொழியப்படும் திட்டங்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து தனிப்பட்ட 'தடையின்மைச் சான்றிதழ்' (NOC) பெறுவதும் அவசியமாகும்.
  • அனைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் (MNRE) மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • இந்த வழிகாட்டுதல்கள் வெளிநாட்டினரின் பங்கேற்பு மற்றும் பணியாளர் நியமனம் ஆகியவற்றின் மீதும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
  • உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள், பணியாளர்கள் அல்லது தொழிலாளர்களை விண்ணப்ப தாரர்கள் ஈடுபடுத்தக்கூடாது என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • LAC-க்கு அருகிலுள்ள தற்போதைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் பெரும்பாலும் சிறிய அளவிலானவை; அதேசமயம் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள சர்வதேச எல்லைப் (IB) பகுதிகளை ஒட்டியுள்ள திட்டங்கள் ஒப்பீட்டளவில் பெரியவை.
  • ஜம்மு-காஷ்மீரில், கட்டுப்பாட்டுக் கோடு (LoC) பகுதியையொட்டி பெரும்பாலும் கட்டிடங்களின் கூரைகளில் அமைக்கப்படும் சூரியமின் சக்தித் திட்டங்களே (solar rooftop installations) உள்ளன; அதே வேளையில் கார்கில் மற்றும் லடாக் பகுதிகளில் சூரிய சக்தி ஒளி மின்னழுத்த (solar photovoltaic) திட்டங்கள் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்