இந்திய செவிலியர் தினத்தை முன்னிட்டு இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் செவிலியர் பணியாளர்களுக்கு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை வழங்கினார்.
இந்த விருதுகளானது செவிலியர்களால் வழங்கப்படும் சிறப்பான சேவைகளை அங்கீகரிப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் 1973 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன.
நிபா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும் போது கொடிய நிபா வைரஸால் கேரளாவைச் சேர்ந்த லினி பிஎன் என்ற செவிலியர் இறந்தார். அவருடைய இறப்பிற்குப் பின்பு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இந்த விருதானது மேலும் 35 செவிலியர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.