December 18 , 2025
15 hrs 0 min
50
- 2025 ஆம் ஆண்டின் 4வது தேசிய லோக் அதாலத் இந்தியா முழுவதும் 2.59 கோடி தகராறுகளை வெற்றிகரமாகத் தீர்த்துள்ளது.
- 2022–23 முதல் 2024–25 ஆம் ஆண்டு வரை, நாடு முழுவதும் பல்வேறு லோக் அதாலத்கள் மூலம் 23.5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தீர்க்கப் பட்டன.
- 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரிகள் சட்டத்தின் கீழ் லோக் அதாலத்கள் நிறுவப்பட்டன.
- அவை மாற்றுத் தகராறு தீர்வு (ADR) மூலம் விரைவான மற்றும் செலவு குறைந்த நீதியை வழங்குகின்றன.
- தேசிய நீதித்துறை தரவுக் கட்டமைப்பின் (NJDG) படி, 4.7 கோடிக்கும் அதிகமான நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதே லோக் அதாலத்களின் நோக்கமாகும்.
- லோக் அதாலத்கள் இந்திய தலைமை நீதிபதியை (CJI) தலைமைப் புரவலராகக் கொண்டு தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தால் (NALSA) ஏற்பாடு செய்யப் படுகின்றன.

Post Views:
50