தேசிய MSME தொழில்துறை தொகுதி விழிப்புணர்வுத் திட்டம்
November 15 , 2024 504 days 349 0
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை நிறுவனங்களுக்கு (MSME) நிதி அணுகலை மேம்படுத்துவதற்காக ஒரு தேசிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
ஒரு தொழில்துறை தொகுதி என்பது நன்கு அடையாளம் காணக் கூடிய மற்றும், தற்போது நடைமுறைக்கு ஏற்ற, அருகமைந்த பகுதிகளில் மற்றும் ஒத்தத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் குழுவாகும்.
இது தொழில்நுட்பம், திறன் மற்றும் தர மேம்பாடு, சந்தை அணுகல், மூலதனத்திற்கான அணுகல் போன்ற சில பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் MSE நிறுவனங்களின் நிலைத் தன்மை மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கும்.