தேர்தல் ஆணையமானது வாக்காளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு மற்றும் செலவுப் பணவீக்கக் குறியீட்டின் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு வேட்பாளருக்கான பிரச்சார செலவு வரம்புகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் முன்னாள் இந்திய வருவாய்த் துறை அலுவலர் மற்றும் பொது இயக்குனர் (விசாரணைப் பிரிவு) ஹரிஷ்குமார் மற்றும் பொதுச் செயலாளர் மற்றும் பொது இயக்குனர் (செலவுப் பிரிவு) உமேஷ் சின்ஹா ஆகிய இரு உறுப்பினர்கள் உள்ளனர்.