2029 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக 2026 ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை மசோதா முன்மொழியப் பட்டுள்ளது.
சமீபத்திய மக்கள் தொகை தரவுகளைப் பயன்படுத்தி மக்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு (2026 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது) தொகுதி மறுவரையறைக்கு விதிக்கப்பட்ட தடையை இது நீக்கும்.
இந்தச் செயல்முறை அரசியலமைப்பின் 82 மற்றும் 170 வது சரத்துகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தொகுதி மறுவரையறை ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையர்களுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ளும்.
“ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரே மதிப்பு” என்ற அடிப்படையில் சமமான மக்கள் தொகை பிரதிநிதித்துவத்தை இந்த ஆணையம் உறுதி செய்யும்.
இதன் உத்தரவுகள் சட்டப்பூர்வமானவை மற்றும் எந்த நீதிமன்றத்திலும் இதனை எதிர்த்து முறையீடு செய்ய முடியாது.