TNPSC Thervupettagam

தொலைதூரச் சட்ட திட்டம்

July 23 , 2021 1465 days 562 0
  • அண்மையில், நீதித்துறை தனது தொலைதூரச் சட்ட திட்டத்தின் கீழ் பொதுச் சேவை மையங்கள் மூலம் 9 லட்சம் பயனாளிகளைக் கடந்த தன் சாதனையை நினைவு கூர்ந்துள்ளது.
  • வழக்காடுதலுக்கு முந்தைய நிலையில் இருக்கும் வழக்குகளுக்குத் தீர்வு காண 2017 ஆம் ஆண்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தினால் இது தொடங்கப்பட்டது.
  • நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல் யார் வேண்டுமாயினும் சட்ட ஆலோசனை பெற இது உதவுகிறது.
  • சட்ட சேவைகள் ஆணையச் சட்டம், 1987 என்ற சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி இலவச சட்ட உதவிக்குத்  தகுதியானவர்களுக்கு இந்த சேவை இலவசமாகும்.
  • பொதுச் சேவைகள் மையத் திட்டமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • இது இந்தியாவின் கிராமங்களுக்குப் பல்வேறு மின்னணுச் சேவைகளை வழங்கச் செய்வதற்கான அணுகல் மையங்களாகச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்