TNPSC Thervupettagam

தொலைத்தொடர்பு திருத்த விதிகள், 2025

October 28 , 2025 2 days 32 0
  • தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதியன்று 2025 ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு (தொலைத்தொடர்பு இணைய வெளிப் பாதுகாப்பு) திருத்த விதிகளை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அறிவித்தது.
  • இந்த விதிகள் ஆனது தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகளைச் சரிபார்க்கவும், தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனங்களை (TIUEs) DoT இணைய வெளிப் பாதுகாப்பு மேற்பார்வையின் கீழ் கொண்டு வரவும் ஒரு கைபேசி எண் சரி பார்ப்பு (MNV) தளத்தை நிறுவுகின்றன.
  • TIUE நிறுவனங்களில், அடையாளம் காணல், சரிபார்ப்பு அல்லது சேவை வழங்கலுக்காக கைபேசி எண்களைப் பயன்படுத்தும் வணிகங்களும் அடங்கும் என்பதோடு மேலும் அவை DoT தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் அதன் பயன்பாட்டு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  • தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், முன்னறிவிப்பு இல்லாமல் எண்களை இடைநிறுத்தவோ அல்லது தடுக்கவோ, காரணங்களை எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்ய, TIUE நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு DoT ஆணையிடலாம்.
  • திருடப்பட்ட அல்லது போலியாக்கப்பட்ட தொலைபேசிகளின் சாதனக் குறுக்கீடுகளை மற்றும் புழக்கத்தைத் தடுப்பதற்காக சர்வதேச கைபேசி உபகரண அடையாள (IMEI) விதிமுறைகளையும் இந்த விதிகள் வலுப்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்