இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரே அவசர உதவி எண்ணான 112 என்ற அமைப்பில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன.
அவசர நிலை பதில் உதவி அமைப்பானது (ERSS - Emergency Response Support System) அனைத்து விதமான அவசர நிலைகளையும் சமாளிப்பதற்கு இந்தியா முழுவதும் அவசர உதவி எண்ணான “112” என்ற எண்ணைக் கருதுகின்றது.
112 என்ற உதவி எண்ணானது காவல் துறை (100), தீயணைப்பு (101), பெண்கள் (1090) ஆகிய உதவி எண்களின் ஒருங்கிணைப்பாகும்.
பெண்கள் பாதுகாப்பு
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக “112 இந்தியா” என்ற கைபேசிச் செயலியில் ஒரு பிரத்தியேக வசதியாக “ஷவுட்” (சப்தமிடு) என்ற வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
“ஷவுட்” வசதியைப் பயன்படுத்தி, பெண்கள் பின்வருபவர்களிடமிருந்து உடனடி உதவியைப் பெற முடியும்.
அருகில் உள்ள பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்கள்.
அவசர நிலை உதவி மையம்
இந்த திட்டமானது நிர்பயா நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது.
நிர்பயா நிதி என்பது பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதியாகும்.