கடைசி ஆயுதமேந்திய மாவோயிஸ்ட் உறுப்பினரும் சரணடைந்த பிறகு பீகார் நக்சல் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இடதுசாரி தீவிரவாதத்தை (LWE) ஒழிப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2026 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
நக்சலிசம் அல்லது மாவோயிசம் என்றும் அழைக்கப்படும் LWE, 1967 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி இயக்கத்துடன் தொடங்கியது.
இது Red Corridor (சிவப்பு வழித் தடம்) என்றழைக்கப் படும் பகுதிகள் முழுவதும் பரவி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களையும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகளையும் பாதித்தது.